பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக விலகி இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு அவரது முன்னாள் கணவரான நாக சைதன்யா மற்றும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கும் நடிகை ஷோபிதா துலிபல்லா இடையில் காதல் என ஒரு வதந்தி பரபரப்பாகப் பரவியது. அது குறித்து சிலர் வேண்டுமென்றே சமந்தாவின் பெயரையும் குறிப்பிட்டு வந்தனர். அதனால்தான் சமந்தா மனமுடைந்து இப்படி சமூக வலைத்தளங்களை விட்டு விலகியிருக்கலாம் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் சமந்தா. அடிக்கடி சுவாரசியமாக ஏதாவது ஒரு பதிவிட்டு வருவார். தற்போது பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றி பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்நிகழ்ச்சியில் சமந்தா தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி சில விஷயங்களைப் பேசியுள்ளார் என்றும் தெரிகிறது. விரைவில் ஓடிடியில் வர உள்ள அந்த நிகழ்ச்சிக்காகக் கூட அவர் விலகியிருக்கலாம் என்கிறார்கள்.