பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
புதுடில்லி : மறைந்த ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, நடிகை ரியா சக்ரவர்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை சித்தரிக்கும் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சுஷாந்த் சிங். இவர், 2020ல் தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் சவுமிக் சக்ரவர்த்தி உள்ளிட்ட 35 பேர் மீது போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரியா சக்ரவர்த்தி, போதை மருந்தை சுஷாந்த் சிங்கிற்கு சப்ளை செய்து வந்துள்ளார். போதை மருந்துக்கான தொகையை ரியா தந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபணமானால் அவருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றார்.
இந்த குற்றச்சாட்டை ரியா சக்ரவர்த்தி மறுத்து உள்ளார். அதேசமயம், சுஷாந்த் சிங் போதை மருந்து பயன்படுத்துவார் என அவர் ஒப்புக் கொண்டு உள்ளார். ரியா, சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், ஒரு மாத சிறைத்தண்டனைக்குப் பின் ஜாமினில் வந்துள்ளார்.