கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, முன்னணி நாயகியாக திகழ்ந்தார். சமீபகாலமாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்து 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் விஜய்யின் தெறி படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக வித்யாசாகர் காலமானார். இதனிடையே நேற்று ஜூலை 12ம் தேதி மீனா மற்றும் வித்யாசாகரின் 13வது திருமண நாளாகும். இந்த நிலையில் மீனா கடந்த ஆண்டு போட்ட ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், ‛‛நீ என் வாழ்வில் வானவில் போல வந்து என் வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக்கினாய். சேர்ந்து இருப்பதுதான் அற்புதமானது. எனக்கு பிடித்த இடம் அதுதான். நீ கொடுத்த புன்னகையை எப்போதும் அணிந்திருப்பேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்'' என மீனா பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது.