லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர்வெளியாகி அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த டீசரின் பிரம்மாண்டமான காட்சிகளுக்கும் பின்னணி இசைக்கும் சோசியல் மீடியாவில் பாராட்டு கிடைத்து வருகிறது. அதிலும் டீசரில் இடம் பெற்றுள்ள ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை பிரமாதமாக இருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
சோழர் காலத்து கதையில் உருவாகி இருப்பதால் அந்த காலகட்டத்தின் இசைக்கருவிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக சேகரித்து அதற்கான பின்னணி இசையை ரகுமான் அமைத்திருப்பதாக படக்குழு ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. முக்கியமாக சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பம்பை, உடுக்கை, உருமி, தம்பட்டம், கொம்பு, பஞ்சமுக வாத்தியம் உள்பட பல இசைக்கருவிகளை இந்த படத்தின் பின்னணி இசையில் பயன்படுத்தியுள்ளார் ரகுமான். ஆனால் சோழர் காலத்தைச் சார்ந்த பல இசைக்கருவிகள் தமிழகத்தில் கிடைக்காத நிலையில் சில இசை கருவிகளை தாய்லாந்து நாட்டில் வாங்கி வந்து பின்னணி இசை அமைத்திருக்கிறார். இப்படி சோழர் காலத்தை திரை வடிவப்படுத்தி இருக்கும் மணிரத்னத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை வாங்கி வந்து முழுக்க முழுக்க ஒரிஜினல் கருவிகளை வைத்தே பின்னணி இசை அமைத்திருக்கிறாராம் ஏ.ஆர்.ரகுமான்.