புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர்வெளியாகி அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த டீசரின் பிரம்மாண்டமான காட்சிகளுக்கும் பின்னணி இசைக்கும் சோசியல் மீடியாவில் பாராட்டு கிடைத்து வருகிறது. அதிலும் டீசரில் இடம் பெற்றுள்ள ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை பிரமாதமாக இருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
சோழர் காலத்து கதையில் உருவாகி இருப்பதால் அந்த காலகட்டத்தின் இசைக்கருவிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக சேகரித்து அதற்கான பின்னணி இசையை ரகுமான் அமைத்திருப்பதாக படக்குழு ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. முக்கியமாக சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பம்பை, உடுக்கை, உருமி, தம்பட்டம், கொம்பு, பஞ்சமுக வாத்தியம் உள்பட பல இசைக்கருவிகளை இந்த படத்தின் பின்னணி இசையில் பயன்படுத்தியுள்ளார் ரகுமான். ஆனால் சோழர் காலத்தைச் சார்ந்த பல இசைக்கருவிகள் தமிழகத்தில் கிடைக்காத நிலையில் சில இசை கருவிகளை தாய்லாந்து நாட்டில் வாங்கி வந்து பின்னணி இசை அமைத்திருக்கிறார். இப்படி சோழர் காலத்தை திரை வடிவப்படுத்தி இருக்கும் மணிரத்னத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை வாங்கி வந்து முழுக்க முழுக்க ஒரிஜினல் கருவிகளை வைத்தே பின்னணி இசை அமைத்திருக்கிறாராம் ஏ.ஆர்.ரகுமான்.