புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
ஆடுகளம் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் கிஷோர். தென்னிந்திய மொழி படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வரும் கிஷோர், வனயுத்தம் படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனாக நடித்தார். இதை தொடர்ந்து ஹரிதாஸ், கடிகார மனிதர்கள் உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‛மஞ்ச குருவி'.
வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி இயக்குகிறார். வேல் ஒளிப்பதிவு செய்கிறார், சவுந்தர்யன் இசை அமைக்கிறார். புதுமுகம் விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி, குங்பூ பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி கூறியதாவது: இன்றைய சமூக சூழலில் மாற்றங்கள் மட்டுமே மனிதனை நல்வழி படுத்தும் என்னும் கருத்தில், ஒருவன் தன்னை மாற்றிக் கொள்ள எதையெல்லாம் இழக்கிறான் என்ற கருவோடு, மஞ்ச குருவி படம் தயாராகி, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.