ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
ஆடுகளம் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் கிஷோர். தென்னிந்திய மொழி படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வரும் கிஷோர், வனயுத்தம் படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனாக நடித்தார். இதை தொடர்ந்து ஹரிதாஸ், கடிகார மனிதர்கள் உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‛மஞ்ச குருவி'.
வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி இயக்குகிறார். வேல் ஒளிப்பதிவு செய்கிறார், சவுந்தர்யன் இசை அமைக்கிறார். புதுமுகம் விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி, குங்பூ பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி கூறியதாவது: இன்றைய சமூக சூழலில் மாற்றங்கள் மட்டுமே மனிதனை நல்வழி படுத்தும் என்னும் கருத்தில், ஒருவன் தன்னை மாற்றிக் கொள்ள எதையெல்லாம் இழக்கிறான் என்ற கருவோடு, மஞ்ச குருவி படம் தயாராகி, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.