2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழகத்தைச் சேர்ந்த மாஸ்ட்ரோ என அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா ராஜ்யபசபா நியமன எம்.பி.யாக நேற்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் இளையராஜா. இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா அமெரிக்காவில் உள்ளார். 20ம் தேதி தான் சென்னை வருகிறார். இதனால் அங்கிருந்தபடி சமூகவலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார் இளையராஜா.
பிரதமர், முதல்வருக்கு நன்றி
பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார் இளையராஜா. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛மோடிஜியின் எண்ணங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இசை, கலை மற்றும் கலாச்சாரத்தின் அழகை நம் சமூகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பு இது'' என குறிப்பிட்டுள்ளார்.
இதேப்போல் இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லியிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள இளையராஜா, ‛‛தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்திக்கு என் மனமார்ந்த நன்றி'' என்றார்.
எல்லோருக்கும் நன்றி
இளையராஜாவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாததால் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛என் மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள், இந்திய அரசு எனக்களித்த கவுரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர். உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி...'' என்றார் இளையராஜா.