பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்த விக்ரம் படம் சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தல பத்தல பாடலும் வைரலாக பரவியது. இந்த பாடலை பார்வையற்ற மாற்றத்திறனாளியான திருமூர்த்தி என்பவர் பாடி அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் வைரல் ஆனது. இந்த நிலையில் திருமூர்த்தியை தனது ஆழ்வார்பேட்டை அலுவலத்திற்கு அழைத்த கமல்ஹாசன் அவரை பாராட்டினார்.
அப்போது திருமூர்த்தி முறையாக இசை கற்று இசை கலைஞன் ஆக வேண்டும் என்கிற தனது ஆசையை கமலிடம் தெரிவித்தார். அப்போது கமல் ஏ.ஆர்.ரகுமானுடன் தொடர்பு கொண்டு அவரது கே.எம்.மியூசிக் அகாடமியில் திருமூர்த்திக்கு இசை பயிற்சி அளிக்குமாறும், அதற்கான செலவை தான் ஏற்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏ.ஆர்.ரஹ்மானும் ஏற்றுக் கொண்டார்.
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடி பலரின் கவனத்தை ஈர்த்தார் திருமூர்த்தி. அந்த படத்திற்கு இசையமைத்த இமான், தனது படங்களில் ஓரிரு பாடல்களை அவரை பாட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




