ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்த விக்ரம் படம் சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தல பத்தல பாடலும் வைரலாக பரவியது. இந்த பாடலை பார்வையற்ற மாற்றத்திறனாளியான திருமூர்த்தி என்பவர் பாடி அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் வைரல் ஆனது. இந்த நிலையில் திருமூர்த்தியை தனது ஆழ்வார்பேட்டை அலுவலத்திற்கு அழைத்த கமல்ஹாசன் அவரை பாராட்டினார்.
அப்போது திருமூர்த்தி முறையாக இசை கற்று இசை கலைஞன் ஆக வேண்டும் என்கிற தனது ஆசையை கமலிடம் தெரிவித்தார். அப்போது கமல் ஏ.ஆர்.ரகுமானுடன் தொடர்பு கொண்டு அவரது கே.எம்.மியூசிக் அகாடமியில் திருமூர்த்திக்கு இசை பயிற்சி அளிக்குமாறும், அதற்கான செலவை தான் ஏற்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏ.ஆர்.ரஹ்மானும் ஏற்றுக் கொண்டார்.
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடி பலரின் கவனத்தை ஈர்த்தார் திருமூர்த்தி. அந்த படத்திற்கு இசையமைத்த இமான், தனது படங்களில் ஓரிரு பாடல்களை அவரை பாட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.