நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (என்.எப்.டி.சி) தனியார் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து தமிழ் சினிமா பற்றிய ஆய்வு ஒன்றை நடத்த இருக்கிறது. இதனை என்எப்டிசி இயக்குனர் ராஜேஷ் கண்ணா ஏற்பாடு செய்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் துறையின் தற்போதைய நிலை, எதிர்கால சாத்தியக்கூறுகள், திரைப்படத் துறையின் வருவாய் தரப்பு பங்குதாரர்களான தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரை நேரடியாக சந்தித்து இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
அவர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்திடம் கொடுக்கப்படுகிறது. அதன்பிறகு வருவாய் இழப்பை அடையாளம் கண்டு சரி செய்தல், தயாரிப்பில் உள்ள தயாரித்து முடிக்கப்பட்டுள்ள படங்களை அடையாளம் கண்டு ஆதரவளிக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் ராஜேஷ் கண்ணா கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர்களின் ஆதரவுடன் மட்டுமே இந்த திட்டம் வெற்றிகரமாக அமையும். இந்த முயற்சி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். என்கிறார்.