மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (என்.எப்.டி.சி) தனியார் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து தமிழ் சினிமா பற்றிய ஆய்வு ஒன்றை நடத்த இருக்கிறது. இதனை என்எப்டிசி இயக்குனர் ராஜேஷ் கண்ணா ஏற்பாடு செய்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் துறையின் தற்போதைய நிலை, எதிர்கால சாத்தியக்கூறுகள், திரைப்படத் துறையின் வருவாய் தரப்பு பங்குதாரர்களான தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரை நேரடியாக சந்தித்து இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
அவர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்திடம் கொடுக்கப்படுகிறது. அதன்பிறகு வருவாய் இழப்பை அடையாளம் கண்டு சரி செய்தல், தயாரிப்பில் உள்ள தயாரித்து முடிக்கப்பட்டுள்ள படங்களை அடையாளம் கண்டு ஆதரவளிக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் ராஜேஷ் கண்ணா கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர்களின் ஆதரவுடன் மட்டுமே இந்த திட்டம் வெற்றிகரமாக அமையும். இந்த முயற்சி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். என்கிறார்.