மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! |
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (என்.எப்.டி.சி) தனியார் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து தமிழ் சினிமா பற்றிய ஆய்வு ஒன்றை நடத்த இருக்கிறது. இதனை என்எப்டிசி இயக்குனர் ராஜேஷ் கண்ணா ஏற்பாடு செய்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் துறையின் தற்போதைய நிலை, எதிர்கால சாத்தியக்கூறுகள், திரைப்படத் துறையின் வருவாய் தரப்பு பங்குதாரர்களான தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரை நேரடியாக சந்தித்து இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
அவர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்திடம் கொடுக்கப்படுகிறது. அதன்பிறகு வருவாய் இழப்பை அடையாளம் கண்டு சரி செய்தல், தயாரிப்பில் உள்ள தயாரித்து முடிக்கப்பட்டுள்ள படங்களை அடையாளம் கண்டு ஆதரவளிக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் ராஜேஷ் கண்ணா கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர்களின் ஆதரவுடன் மட்டுமே இந்த திட்டம் வெற்றிகரமாக அமையும். இந்த முயற்சி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். என்கிறார்.