பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் கடந்த 2018 பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை தி.நகரில் உள்ள ஒரு நடன பயிற்சி மையத்தில் ஒத்திகை செய்து வந்தார்.
அப்போது அழகேசன் என்பவர் அமலாபாலை மலேசியாவில் உள்ள இப்ராஹிம் என்ற தொழில் அதிபரை ஒரு இரவு சந்தோஷப்படுத்த வேண்டும் என்று கூறி அதற்காக பணபேரமும் நடத்தினார். இதுகுறித்து அமலாபால் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடன பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஸ்ரீதர், அழகேசன், தொழில் அதிபர்கள் பாஸ்கரன், இப்ராஹிம் ஆகியோர் மீது சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன், ஸ்ரீதரன் ஆகியோர் தங்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது எனக் கூறி தொழிலதிபர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.