‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கீதா கோவிந்தம் படம் மூலம் தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ராஷ்மிகா, சமீபத்தில் வெளியான புஷ்பா படம் மூலம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சொந்தக்காரராக மாறியுள்ளார். குறிப்பாக அவர் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் பதிலளிப்பது, பொதுவெளியில் அவர்களுடன் எந்த பாகுபாடும் காட்டாமல் புகைப்படம் எடுத்துக்கொள்வது என எளிமையான ஒரு நடிகையாக காட்சியளிப்பதால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.
அப்படி சமீபத்தில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் நடிப்பதற்காக தனது கேரவனில் இருந்து இறங்கி வந்தார் ராஷ்மிகா. அப்போது அங்கே கூடியிருந்த புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தபடியே அங்கிருந்த ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் ராஷ்மிகா. ஒருசில ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
அப்படி ஒரு ரசிகர் ராஷ்மிகாவுடன் புகைப்படம் எடுக்க முன்னால் வந்தபோது ராஷ்மிகாவின் பாதுகாவலராக இருந்த ஒரு பவுன்சர் அவரை தள்ளிவிட முயற்சி செய்தார் ஆனால் கண்களாலேயே அந்த பவுன்சரை ஒதுங்கி இருக்குமாறு உத்தரவிட்ட ராஷ்மிகா முகத்தில் எந்தவித மாறுபாடும் காட்டாமல் புன்சிரிப்புடன் அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.




