வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பாலிவுட்டிலும், ஹாலிவுட்டைப் போல 'பப்பராஸி' புகைப்படக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அதாவது பிரபலங்கள் அவர்களது வீட்டை விட்டு வெளியேறிய நிமிடம் முதல் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் வரை அவர்களைப் பின் தொடர்ந்து புகைப்படங்களை எடுப்பவர்களை 'பப்பராஸி' புகைப்படக் கலைஞர்கள் என்றழைப்பார்கள்.
இப்படியான பப்பராஸி புகைப்படக் கலைஞர்கள் துரத்தியதால் தான் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் இளவரசி டயானா விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் என்று சொல்வார்கள்.
பாலிவுட்டில் இப்போதும் நடிகைகள் வீட்டை விட்டு வெளியில் வந்து ஷாப்பிங் சென்றால், ஜிம்முக்குச் சென்றால், படப்பிடிப்புக்குச் சென்றால், நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் அவர்கள் பின்னால் சென்று பல பப்பராஸி புகைப்படக் கலைஞர்கள் போட்டி போட்டு படமெடுப்பார்கள். அவர்களுக்காக நடிகைகளும் சில நிமிடங்கள் ஒதுக்கி போஸ் கொடுப்பார்கள்.
அப்படி சில கலைஞர்கள் நடிகை ராஷ்மிகாவை புகைப்படம் எடுத்த போது, “இந்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்,” என அப்பாவியாக சிரித்துக் கொண்டே கேள்வி கேட்டார். அந்தப் புகைப்படங்கள் பல இணையதளங்களில் வெளிவருவதை ராஷ்மிகா இதுவரை பார்த்திருக்க மாட்டாரோ ?.