பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

நடிகர் சூர்யா மற்றும் பாலா இருவரும் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூட்டணி சேர்ந்து சூர்யா 41 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படம் மூலம் இணைந்துள்ளனர். இந்த படம் டிராப் ஆகி விட்டது என்று கூட சில வாரங்களுக்கு முன்பு செய்தி பரவியது. ஆனால் சூர்யா அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் ஷூட்டிங்கில் பங்கேற்க ஆவலுடன் காத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சூர்யா தற்போது பாலா படத்தின் ஷூட்டிங்கை மேலும் தள்ளிப்போட்டிருக்கிறார். அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல இருக்கிறார். அங்கிருந்து திரும்பி வந்த பிறகு தான் பாலா பட ஷூட்டிங்கில் அவர் பங்கேற்பாராம். கோவாவில் அடுத்தகட்ட ஷூட்டிங் ஒரு மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




