ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதையடுத்து நோட்டா, கழுகு-2, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடத்தில் நடித்தார். இடையில் விபத்தில் சிக்கி மீண்டு வந்தார். தற்போது கடமையைச் செய், பாம்பாட்டம், பஹீரா, சிறுத்தை சிவா, தி லைஜன்ட், பெஸ்டி உள்பட பத்து படங்கள் இவர் கைவசம். உள்ளன. இவற்றில் சில படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
இதில் எஸ் .ஜே. சூர்யா உடன் இணைந்து அவர் நடித்துள்ள கடமையைச் செய் படம் ஜூன் 24ல் திரைக்கு வருகிறது. அதைத்தொடர்ந்து ரங்கா இயக்கத்தில் அவர் நடித்துள்ள பெஸ்டி என்ற படம் ஜூலை 1ல் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு யாஷிகாவின் படங்கள் வெளியாக உள்ளன.