‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

இசையமைப்பாளர் இளையராஜா சென்னையை தொடர்ந்து கோவையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இன்று (ஜுன் 2) இளையராஜாவின் 80வது பிறந்தநாள். பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு, கோவை மக்களை இன்னிசை மழையில் நனையவிடப்போகிறார். கோவை கொடீசியா வளாகத்தில் மாலை 6 மணியளவில் ‛ராஜா' இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை தினமலரும் இணைந்து நடத்துகிறது.
இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான மனோ, கார்த்திக், உஷா உதூப், எஸ்பிபி சரண், யுகேந்திரன் வாசுதேவன், ஸ்வேதா மோகன், விபாவரி ஆப்தே ஜோஷி, அனிதா, பிரியா ஹேமேஷ், சுர்முகி உள்ளிட்டோர் பாட உள்ளனர். இவர்களோடு இளையராஜாவும் சில பாடல்களை பாட உள்ளார். அதோடு அவர் இசையமைத்த சில பாடல்கள் உருவான விதம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் ரசிகர்களுக்கு வழங்க உள்ளார்.
இந்த நிலையில், இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் இளையராஜா. அவரது பதிவில், ‛இந்த சிறப்பு நாளில் இன்று மாலை 6 மணிக்கு ஒரு அற்புதமான மற்றும் மிகப்பெரிய அறிவிப்பு காத்திருக்கிறது' எனக் கூறியுள்ளார். இதனால் இளையராஜா பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு இது ‛டபுள்' ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




