ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இசையமைப்பாளர் இளையராஜா சென்னையை தொடர்ந்து கோவையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இன்று (ஜுன் 2) இளையராஜாவின் 80வது பிறந்தநாள். பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு, கோவை மக்களை இன்னிசை மழையில் நனையவிடப்போகிறார். கோவை கொடீசியா வளாகத்தில் மாலை 6 மணியளவில் ‛ராஜா' இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை தினமலரும் இணைந்து நடத்துகிறது.
இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான மனோ, கார்த்திக், உஷா உதூப், எஸ்பிபி சரண், யுகேந்திரன் வாசுதேவன், ஸ்வேதா மோகன், விபாவரி ஆப்தே ஜோஷி, அனிதா, பிரியா ஹேமேஷ், சுர்முகி உள்ளிட்டோர் பாட உள்ளனர். இவர்களோடு இளையராஜாவும் சில பாடல்களை பாட உள்ளார். அதோடு அவர் இசையமைத்த சில பாடல்கள் உருவான விதம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் ரசிகர்களுக்கு வழங்க உள்ளார்.
இந்த நிலையில், இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் இளையராஜா. அவரது பதிவில், ‛இந்த சிறப்பு நாளில் இன்று மாலை 6 மணிக்கு ஒரு அற்புதமான மற்றும் மிகப்பெரிய அறிவிப்பு காத்திருக்கிறது' எனக் கூறியுள்ளார். இதனால் இளையராஜா பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு இது ‛டபுள்' ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.