புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சிறிய இடைவெளிக்கு பிறகு ஹரி இயக்கி உள்ள படம் யானை. இந்த படத்தில் ஹரியின் மைத்துனர் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் ஹீரோயின், சமுத்திரகனி, அம்மு அமிராமி, ராஜேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் நடித்திருப்பது பற்றி அருண் விஜய் கூறியதாவது: மாமாவின் (ஹரி) இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம். அது தள்ளிபோய் கொண்டே வந்து இப்போது நிறைவேறியிருக்கிறது, படப்பிடிப்பில் மாமா, மாப்ஸ் என்று உறவு சொல்லித்தான் பேசிக் கொள்வோம். மற்றபடி எந்த சலுகையும் இல்லை. உறவு வேறு, கலை வேறு என்பதை தெளிவாக புரிந்து கொண்டு பணியாற்றினோம்.
இந்த படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். சுற்றியுள்ளவரை பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான், எனது கதாபாத்திரம். இந்த படத்தில் நிறைய சவால்கள் இருந்தது. ரொம்ப நாள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். படத்தின் ஆக்சன் பெரிய சவாலாக இருந்தது. எனக்கு அடிபட்டது, அதையும் மீறி படத்தை எடுத்து முடித்தோம். கண்டிப்பாக படம் பேசப்படும் என நம்புகிறோம். என்றார்.