மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சிறிய இடைவெளிக்கு பிறகு ஹரி இயக்கி உள்ள படம் யானை. இந்த படத்தில் ஹரியின் மைத்துனர் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் ஹீரோயின், சமுத்திரகனி, அம்மு அமிராமி, ராஜேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் நடித்திருப்பது பற்றி அருண் விஜய் கூறியதாவது: மாமாவின் (ஹரி) இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம். அது தள்ளிபோய் கொண்டே வந்து இப்போது நிறைவேறியிருக்கிறது, படப்பிடிப்பில் மாமா, மாப்ஸ் என்று உறவு சொல்லித்தான் பேசிக் கொள்வோம். மற்றபடி எந்த சலுகையும் இல்லை. உறவு வேறு, கலை வேறு என்பதை தெளிவாக புரிந்து கொண்டு பணியாற்றினோம்.
இந்த படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். சுற்றியுள்ளவரை பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான், எனது கதாபாத்திரம். இந்த படத்தில் நிறைய சவால்கள் இருந்தது. ரொம்ப நாள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். படத்தின் ஆக்சன் பெரிய சவாலாக இருந்தது. எனக்கு அடிபட்டது, அதையும் மீறி படத்தை எடுத்து முடித்தோம். கண்டிப்பாக படம் பேசப்படும் என நம்புகிறோம். என்றார்.