ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த மலையாள நடிகை மாளவிகா மோகனன், அடுத்தது விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் என முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். தெலுங்கு, இந்தியிலும் கூட படங்களில் நடித்து வரும் மாளவிகா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜாலியாக வெளியூர்களுக்கு கிளம்பி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக மாலத்தீவுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் மாளவிகா, அங்கு கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தான் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களையும அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இந்தநிலையில் அந்த சுற்றுலாவில் ஒரு சிறு மாற்றமாக நமது நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தடோபா வனவிலங்கு சரணாலயத்திற்கு தனது தோழிகள் இருவருடன் விசிட் அடித்துள்ளார் மாளவிகா. இந்த சரணாலயத்தில் புலிகள் மற்றும் சிறுத்தைகள் இருப்பதை கேள்விப்பட்டதில் இருந்தே இங்கே சபாரி போக வேண்டும் என்பது தனது ஆசையாக இருந்ததாக கூறியுள்ள மாளவிகா, இந்த வன பயணத்தின்போது இரண்டு புலிகளையும் ஒரு சிறுத்தையையும் மிக அருகில் பார்த்ததாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன்.