புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஹரி இயக்கத்தில் அருண்விஜய் முதன் முறையாக இணைந்துள்ள படம் யானை. ஹரியின் வழக்கமான படங்கள் பாணியில் சென்டிமென்ட் ஆக்ஷன் கலந்த கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் கிராமத்து நாயகனாக நடித்துள்ள அருண் விஜய் பல காட்சிகளில் புகை பிடித்தபடி நடித்திருக்கிறார். இதுகுறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, இந்த படத்தின் காட்சிகளுக்கு தேவைப்பட்டதால் சில காட்சிகளில் புகை பிடித்தபடி நடித்திருக்கிறேன். ஆனபோதிலும் எதிர்காலத்தில் இதுபோன்ற காட்சிகளை தவிர்த்து விடுவேன் என்று கூறிய அருண் விஜய், இந்த படத்தில் பல அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில் ஒரு காட்சியில் நடித்தபோது எனக்கு உடம்பில் காயம் ஏற்பட்டது. என்றாலும் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொண்டு தொடர்ந்து நடித்தேன். இந்த யானை படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருந்தாலும் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய உணர்வுப்பூர்வமான காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளது. அதனால் அனைவரது மனதிலும் இடம் பிடிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்கிறார் அருண்விஜய்.