ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

'வீரமே வாகை சூடும்' படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் 'லத்தி'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார். ஆனால், இயக்குனருக்குத் தெரியாமல் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். ஏற்கெனவே, நடிகர் சங்க விவகாரங்களில் ரமணா, நந்தா ஆகியோரது பேச்சைத்தான் விஷால் கேட்பதாக முன்னர் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அதனால், விஷால் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் 'லத்தி' பட அறிவிப்பு விவகாரத்தில் படத்தின் இயக்குனருக்கே அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள் விஷால், நந்தா, ரமணா. படம் பற்றிய வெளியீட்டு அறிவிப்பை படத்தின் இயக்குனரான வினோத்குமார் அவரது டுவிட்டர் பதிவில் கூட பகிரவில்லை. படத்தின் வேலைகளை வினோத்குமார் தொடர்ந்து பார்ப்பாரா அல்லது விஷாலும், அவரது நண்பர்களுமே பார்ப்பார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.