மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஹிந்தி தேசிய மொழியா, இல்லையா என்பது குறித்து கன்னட நடிகர் சுதீப்பும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானும் மோதிக் கொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த பா.ஜ.க மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி "நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சில முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை எங்கள் கட்சி பார்க்கிறது. மாநில மொழிகளை மதிக்கிறோம், வணங்குகிறோம் என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து கிச்சா சுதீப் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஹிந்தி இனி நமது தேசிய மொழி அல்ல என கூறி நான் கலகத்தையோ, விவாதத்தையோ ஏற்படுத்தவில்லை. எந்தவித நோக்கமுமின்றி தன்னிச்சையாக நிகழ்ந்தது அது. எனது கருத்தை நான் முன் வைத்தேன் அவ்வளவுதான். பிரதமரின் வார்த்தைகளில் இது வெளிப்பட்டது ஒருவித பெருமையாகவும் பாக்கியம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. நான் கன்னட மொழிக்காக மட்டும் பேசவில்லை. எல்லா மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என பிரதமர் பேசிய கருத்தைத் தான் நானும் அன்றைக்கு முன் வைத்தேன். மோடியை அரசியல்வாதியாக மட்டும் பார்க்காமல் ஒரு தலைவராகவும் பார்க்கிறோம் என சுதீப் தெரிவித்துள்ளார்.