மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவந்த படம் 'கேஜிஎப் 2'. இப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை இதுவரை பெற்றுள்ளது.
ஹிந்தியில் ரூ.400 கோடி வசூலைப் பெற்றுள்ள இந்தப் படம், கன்னடத்தில் ரூ.160 கோடி, தெலுங்கில் ரூ.130 கோடி வசூலைப் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்திலும் ரூ.100 கோடி வசூலைக் கடக்க உள்ளது. ஒரு திரைப்படம் வெளியான ஐந்து மொழிகளில் நான்கு மொழிகளில் 100 கோடி வசூலித்திருப்பது பெரிய விஷயம். வெளிநாடுகளிலும் இப்படம் 160 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
தமிழில் 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு ஒரு டப்பிங் படம் ரூ.100 கோடி வசூலிப்பது இதுவே முதல் முறை. அதுவும் ஒரு கன்னடப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு தமிழிகத்தில் 100 கோடி வசூலிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. கன்னடப் படத்தை இப்படி ஓட வைக்க வேண்டுமா என திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் கேள்வி எழுப்பியிருந்தாலும் மக்கள் விரும்பும் படங்கள் ஓடி வசூலைக் குவிக்கும் என்று இங்குள்ளவர்களுக்கு புரிய வைத்திருக்கிறார்கள்.