மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் மீனவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் சூர்யா. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் பிரத்யேக பயிற்சியும் மேற்கொண்டு வந்தார் சூர்யா.
இந்நிலையில், வாடிவாசல் படத்துக்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் விடுதலை படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் பிசியானதன் காரணமாக வாடிவாசல் படத்தின் முதற்கட்ட பணிகள் முடங்கி உள்ளதாம். இதனால் அப்படத்தின் ஷுட்டிங்கும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வாடிவாசல் படம் தள்ளிப்போவதால் அதற்கு முன் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் குறுகிய கால தயாரிப்பில் உருவாகும் படமொன்றில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளாராம்.