துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் காட்பாதர், போலோ சங்கர் மற்றும் இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் சிரஞ்சீவி நடிக்கிறார். இந்தநிலையில் சிரஞ்சீவி நடிப்பில் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக ஒரு தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா
இதுபற்றி அவர் கூறும்போது, “எங்களுடைய ராடன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதற்காக அன்பு சிரஞ்சீவிக்கு நன்றி. மாஸ் மன்னனான சிரஞ்சீவியுடன் இணைந்து பிளாக்பஸ்டர் படத்தை உருவாக்குவதற்கு காத்திருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் தெரிகிறது
எண்பது, தொண்ணூறுகளில் சிரஞ்சீவியுடன் இணைந்து பல தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் ராதிகா. அதுமட்டுமல்ல 90களின் நட்சத்திர சங்கமத்தில் அடிக்கடி சந்திப்பு நிகழ்த்தியும் ராதிகா தங்களது நட்பை பலப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.