எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் காட்பாதர், போலோ சங்கர் மற்றும் இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் சிரஞ்சீவி நடிக்கிறார். இந்தநிலையில் சிரஞ்சீவி நடிப்பில் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக ஒரு தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா
இதுபற்றி அவர் கூறும்போது, “எங்களுடைய ராடன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதற்காக அன்பு சிரஞ்சீவிக்கு நன்றி. மாஸ் மன்னனான சிரஞ்சீவியுடன் இணைந்து பிளாக்பஸ்டர் படத்தை உருவாக்குவதற்கு காத்திருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் தெரிகிறது
எண்பது, தொண்ணூறுகளில் சிரஞ்சீவியுடன் இணைந்து பல தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் ராதிகா. அதுமட்டுமல்ல 90களின் நட்சத்திர சங்கமத்தில் அடிக்கடி சந்திப்பு நிகழ்த்தியும் ராதிகா தங்களது நட்பை பலப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.