பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மாநாடு படத்தை அடுத்து மன்மதலீலை என்ற படத்தை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து நாகசைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். வெங்கட்பிரபு எங்கு சென்றாலும் அவரை துரத்தும் ஒரு கேள்வி மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம். இது குறித்து ஏற்கனவே தான் அளித்த பல பேட்டிகளில், மங்காத்தா இரண்டாம் பாகத்துக்கான கதையை அஜித்திடத்தில் கூறி விட்டதாகவும் அவரது அழைப்பு எப்போது வந்தாலும் உடனே அந்த படத்தை தொடங்குவேன் என்று கூறி இருந்தார் வெங்கட்பிரபு.
இந்நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மீண்டும் மங்காத்தா-2 படம் குறித்து இன்னொரு தகவலை வெளியிட்டுள்ளார் வெங்கட்பிரபு. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் சிறப்பான கதையை தயார் செய்து வைத்துள்ளேன். அதோடு அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து மங்காத்தா 2 படத்தை எடுக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். இந்த கதையை அவர்கள் இருவரிடத்திலும் கூறிவிட்டேன். மங்காத்தா 2 படம் விரைவில் உருவாகும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.