விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் சமந்தாவும் நடித்த 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் நேற்று தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று சமந்தா ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூகவலைதளத்தில் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் நயன்தாரா பற்றி சில வார்த்தைகள் எனக் கேட்டதற்கு சமந்தா, “நயன்தாரா நயன்தாராதான், அவரைப் போல வேறு ஒருவர் கிடையாது. அவர் உண்மையானவர், மிகவும் விசுவாசமானவர், நான் சந்தித்தவர்களில் மிகவும் கடின உழைப்பாளி,” என பாராட்டு தெரிவித்துள்ளார்.
நயன்தாரா, சமந்தா முதல் முறையாக இந்தப் படத்தில்தான் இணைந்து நடித்துள்ளனர். சமந்தா நடித்து அடுத்து 'சாகுந்தலம்' திரைப்படம் தெலுங்கில் வெளியாக உள்ளது. 'யசோதா' என்ற தெலுங்குப் படத்திலும், விஜய் தேவரகொன்டா ஜோடியாக மற்றொரு தெலுங்குப் படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.