என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் சமந்தாவும் நடித்த 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் நேற்று தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று சமந்தா ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூகவலைதளத்தில் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் நயன்தாரா பற்றி சில வார்த்தைகள் எனக் கேட்டதற்கு சமந்தா, “நயன்தாரா நயன்தாராதான், அவரைப் போல வேறு ஒருவர் கிடையாது. அவர் உண்மையானவர், மிகவும் விசுவாசமானவர், நான் சந்தித்தவர்களில் மிகவும் கடின உழைப்பாளி,” என பாராட்டு தெரிவித்துள்ளார்.
நயன்தாரா, சமந்தா முதல் முறையாக இந்தப் படத்தில்தான் இணைந்து நடித்துள்ளனர். சமந்தா நடித்து அடுத்து 'சாகுந்தலம்' திரைப்படம் தெலுங்கில் வெளியாக உள்ளது. 'யசோதா' என்ற தெலுங்குப் படத்திலும், விஜய் தேவரகொன்டா ஜோடியாக மற்றொரு தெலுங்குப் படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.