இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கமல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி அதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
ஒரு நாட்டுப்பற்று மிக்க படம் என்றும், இந்திய ராணுவம் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்தான் இந்த படத்தின் மைய கதை என்றும் கூறப்படுகிறது . இதற்காக மத்திய அரசிடம் சில முன் அனுமதி வாங்கும் பணி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும், அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனின் முதல் பான் - இந்திய திரைப்படம் இதுதான் என்று கூறப்படுது.
இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் இணையவுள்ளனர் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்தடுத்து இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது .