விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி நான்கு ஆண்டுகளில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாங்கள் பிரிவதாக அறிவித்தார்கள். தற்போது இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக உள்ளனர்.
இந்நிலையில் நாகசைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து வருவதாகவும் சோசியல் மீடியாவில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. அந்த செய்திக்கு ஒரு விளக்கம் அளித்திருக்கிறார் நாகசைதன்யா.
அவர் கூறுகையில், ‛‛சமந்தாவும் நானும் இன்னும் சட்டப்படி பிரியவில்லை. ஆனால் அதற்குள்ளாக நான் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாக வதந்திகள் வெளியாகி வருவது வருத்தத்தை அளிக்கிறது. இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்திருக்கிறார் நாகசைதன்யா.