பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி நான்கு ஆண்டுகளில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாங்கள் பிரிவதாக அறிவித்தார்கள். தற்போது இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக உள்ளனர்.
இந்நிலையில் நாகசைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து வருவதாகவும் சோசியல் மீடியாவில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. அந்த செய்திக்கு ஒரு விளக்கம் அளித்திருக்கிறார் நாகசைதன்யா.
அவர் கூறுகையில், ‛‛சமந்தாவும் நானும் இன்னும் சட்டப்படி பிரியவில்லை. ஆனால் அதற்குள்ளாக நான் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாக வதந்திகள் வெளியாகி வருவது வருத்தத்தை அளிக்கிறது. இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்திருக்கிறார் நாகசைதன்யா.