மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி உள்ளார். தற்போது அவரது நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதுதவிர யசோதா படத்தில் நடித்து வருகிறார். தனது படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்.
இந்நிலையில் சமூகவலைளத்தில் ரசிகர்கள் உடன் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் உங்களின் முதல் சம்பளம் எவ்வளவு என கேட்டார். அதற்கு, ‛‛நான் பத்தாம் வகுப்போ, 11ம் வகுப்போ படித்தபோது நிகழ்ச்சி ஒன்றில் வரவேற்பு பெண்ணாக பலமணிநேரம் பணிபுரிந்தேன். அதற்காக ரூ.500 சம்பளம் பெற்றேன். அதுதான் எனது முதல் சம்பளம்'' என தெரிவித்துள்ளார்.