மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை வடபழனியில் நடிகர் எம்.எஸ் .பாஸ்கர் உள்பட சின்னத்திரை நடிகர்கள் பலரும் நினைவிருக்கும் வரை விவேக் என்ற பெயரில் ஒரு வீடியோ ஆல்பம் வெளியிட்டார்கள். அப்போது நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசுகையில், சின்ன கலைவாணர் விவேக் ஒரு நல்ல கலைஞர். எனக்கு பல படங்களில் நடிப்பதற்கு அவர் வாய்ப்பு வாங்கி தந்துள்ளார். மக்களிடையே நல்லுள்ளம் நற்பண்பு கொண்ட நல்ல கலைஞர். அப்துல் கலாம் மீது மிகுந்த அன்பு கொண்டதால் அவரது பாதையில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வந்தார் . அந்தவகையில் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தருக்கு இடையிலான நட்பு போன்றது அப்துல்கலாம் விவேக்கின் நட்பு என்று கூறிய அவர், நடிகர் விவேக்கின் இழப்பு எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. அவரது ஆன்மா சாந்தி அடைந்திருக்கும் என்று நம்புகிறேன் என்று பேசினார்.