காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
சினிமா என்பது இயக்குனர்களின் மீடியம் தான். அவர்களது கற்பனையில், கருத்தாக்கத்தில் தான் ஒரு படம் உருவாகிறது என்பது அனைவருக்குமே தெரியும். இயக்குனர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களிடம் தங்களை ஒப்படைக்கும் ஹீரோக்கள்தான் மிகப் பெரிய வெற்றியையும், பெயரையும் பெறுகிறார்கள்.
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சினிமா நடிகர்களின் கைகளில் சென்றுவிட்டது. நடிகர்கள் கை காட்டும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்தான் படங்களை எடுக்கிறார்கள். படத்தில் நடிக்கும் ஹீரோவுக்குப் பிடிக்கவில்லையா வசனத்தை மாற்றுகிறார்கள், காட்சிகளை மாற்றுகிறார்கள், ஏன் கதையையே மாற்றுகிறார்கள்.
தெலுங்கு, கன்னட, மலையாள சினிமாக்களில் இப்போதும் இயக்குனர்களக்குத்தான் அதிக மரியாதை. அவர்களை நம்பி தங்களை ஒப்படைத்தவர்கள் இன்று இந்திய அளவில் புகழ் பெற்று பான்--இந்தியா ஹீரோக்களாக உயர்ந்து நிற்கிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில், குறிப்பாக தமிழில், பிரம்மாண்டத்தை ஆரம்பித்து வைத்தவர் இயக்குனர் ஷங்கர். அவரை முன்னுதாரணமாக வைத்து தெலுங்கில் படங்களை இயக்க ஆரம்பித்தவர் ராஜமவுலி. 'பாகுபலி 1, 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் வெற்றி மூலம் இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராக மாறிவிட்டார். அவர்களது வரிசையில் 'கேஜிஎப் 1, 2' இயக்குனர் பிரசாந்த் நீல் இடம் பிடித்துவிட்டார்.
தென்னிந்திய சினிமா இயக்குனர்கள், இந்திய சினிமா இயக்குனர்களாக உயரந்து புதிய சாதனைகளை படைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.