பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். சில வருடங்களுக்கு முன் நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழுக்கும் வந்தார். முதல் படத்திலேயே மிரட்டலான வில்லத்தனத்தால் ரசிகர்களையும் கவர்ந்தார். இந்தநிலையில் தமிழில் சுந்தர்.சி நடிப்பில் உருவாகிவரும் ஒன் 2 ஒன் என்கிற படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கிறார் அனுராக் காஷ்யப். கதாநாயகியாக ராகினி திவேதி நடிக்கும் இந்த படத்தை திருஞானம் இயக்குகிறார். இவர் திரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு என்கிற படத்தை இயக்கியவர்.
இந்த படத்தில் கதாநாயகனுக்கு இணையாக பவர்புல் வில்லன் வேடம் இருந்ததால் பலபேரை பரிசீலனையில் வைத்திருந்தனர். அந்த கதாபாத்திரத்தில் ஒரு பெண்ணை நடிக்க வைக்கலாமா என்று கூட யோசனை செய்யப்பட்டதாம். இறுதியில் அனுராக் காஷ்யப் தற்போது அந்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த தகவலை அனுராக், சுந்தர்.சி இருவருடனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் தெரியப்படுத்தியுள்ளார் நடிகை குஷ்பு.