தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் |
மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படம் பரியேறும் பெருமாள். இந்தப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, தங்கராசு உட்பட பலர் நடித்திருந்தார்கள். இவர்களில் தங்கராசு என்பவர் அப்பட நாயகன் கதிரின் தந்தையாக நடித்தார். நாட்டுப்புற கலைஞராக இவர் நடித்து இருந்த வேடம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. அதோடு கதைக்கு திருப்புமுனை கதாபாத்திரமாகவும் அமைந்தது.
இந்நிலையில் தங்கராசுவின் வறுமையை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் அவருக்கு புதிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளது. அந்த வீட்டை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.