‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் பிசியாக நடித்து வரும் ராஷி கண்ணா தற்போது இந்தியில் ருத்ரா என்கிற படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ராஷி கண்ணா தென்னிந்திய திரையுலகைப் பற்றி விமர்சித்து பேசியதாக ஒரு தகவல் கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. குறிப்பாக தென்னிந்திய திரையுலகில் நடிகைகளை வெறும் கிளாமராக தான் பயன்படுத்துகிறார்கள் என்பது போன்று அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த தகவலை உடனடியாக மறுத்துள்ளார் ராஷி கண்ணா. இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நான் தென்னிந்திய சினிமா பற்றி விமர்சித்துப் பேசியதாக கடந்த சில நாட்களாக, ஒரு செய்தி சித்தரிக்கப்பட்டும் இட்டுக்கட்டியும் உருவாக்கப்பட்டு வலம் வருகிறது. நான் ஒருபோதும் அப்படி பேசியது இல்லை. நான் எந்தெந்த மொழிகளில் நடித்து வருகிறேனோ அவற்றுக்கு உரிய மரியாதையை தவறாமல் கொடுத்து வருகிறேன். தயவு செய்து இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.




