மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் பிசியாக நடித்து வரும் ராஷி கண்ணா தற்போது இந்தியில் ருத்ரா என்கிற படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ராஷி கண்ணா தென்னிந்திய திரையுலகைப் பற்றி விமர்சித்து பேசியதாக ஒரு தகவல் கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. குறிப்பாக தென்னிந்திய திரையுலகில் நடிகைகளை வெறும் கிளாமராக தான் பயன்படுத்துகிறார்கள் என்பது போன்று அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த தகவலை உடனடியாக மறுத்துள்ளார் ராஷி கண்ணா. இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நான் தென்னிந்திய சினிமா பற்றி விமர்சித்துப் பேசியதாக கடந்த சில நாட்களாக, ஒரு செய்தி சித்தரிக்கப்பட்டும் இட்டுக்கட்டியும் உருவாக்கப்பட்டு வலம் வருகிறது. நான் ஒருபோதும் அப்படி பேசியது இல்லை. நான் எந்தெந்த மொழிகளில் நடித்து வருகிறேனோ அவற்றுக்கு உரிய மரியாதையை தவறாமல் கொடுத்து வருகிறேன். தயவு செய்து இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.