பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்களை இயக்கியவர் ஏ. ஆர். முருகதாஸ். மீண்டும் விஜய் 65ஆவது படத்தை இயக்க இருந்தார். ஆனால் கதை விவகாரத்தில் பிரச்சினை காரணமாக அந்த படத்திலிருந்து முருகதாஸ் விலகி விட்டார். அதன் காரணமாகவே விஜய்யின் 65வது படத்தை நெல்சன் திலிப்குமர் இயக்கி உள்ளார். அதன் பிறகு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு அனிமேஷன் படத்தை முருகதாஸ் இயக்கி வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அடுத்தபடியாக விக்ரம் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவருக்கும் முருகதாஸ் கதை சொல்லி ஓகே பண்ணி விட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஆக்ஷன் கதைகளில் உருவாகும் இந்த படங்களை அடுத்து, அடுத்து இயக்கப் போகும் முருகதாஸ் விக்ரம் நடிக்கும் படத்தை முதலில் இயக்குவார் என்றும், அதன்பின் விஜய் சேதுபதி படத்தை இயக்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.