புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்களை இயக்கியவர் ஏ. ஆர். முருகதாஸ். மீண்டும் விஜய் 65ஆவது படத்தை இயக்க இருந்தார். ஆனால் கதை விவகாரத்தில் பிரச்சினை காரணமாக அந்த படத்திலிருந்து முருகதாஸ் விலகி விட்டார். அதன் காரணமாகவே விஜய்யின் 65வது படத்தை நெல்சன் திலிப்குமர் இயக்கி உள்ளார். அதன் பிறகு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு அனிமேஷன் படத்தை முருகதாஸ் இயக்கி வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அடுத்தபடியாக விக்ரம் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவருக்கும் முருகதாஸ் கதை சொல்லி ஓகே பண்ணி விட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஆக்ஷன் கதைகளில் உருவாகும் இந்த படங்களை அடுத்து, அடுத்து இயக்கப் போகும் முருகதாஸ் விக்ரம் நடிக்கும் படத்தை முதலில் இயக்குவார் என்றும், அதன்பின் விஜய் சேதுபதி படத்தை இயக்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.