ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த சமந்தா. தமிழை விட தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தார். தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவைக் காதலித்து கரம் பிடித்து பின்னர் பிரிந்தார்.
இதுநாள் வரையிலும் சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் தெலுங்கில் ஒரே மேனேஜரே அவர்களது திரைப்படம் சம்பந்தப்பட்ட பணிகளைக் கவனித்து வந்தார். பிரிவுக்குப் பின் அந்த மேனேஜர் நாகசைதன்யாவுக்கு ஆதரவாகச் சென்றதால் தற்போது அந்த மேனேஜரை சமந்தா மாற்றிவிட்டாராம்.
ஹிந்தியிலும் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக பாலிவுட்டைச் சேர்ந்த ஒருவரை புதிய மேனேஜராக நியமித்துள்ளாராம். அவரிடமே தெலுங்குப் படங்களுக்கான பணிகளையும் ஒப்படைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சமந்தா தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.