‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி |
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த சமந்தா. தமிழை விட தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தார். தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவைக் காதலித்து கரம் பிடித்து பின்னர் பிரிந்தார்.
இதுநாள் வரையிலும் சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் தெலுங்கில் ஒரே மேனேஜரே அவர்களது திரைப்படம் சம்பந்தப்பட்ட பணிகளைக் கவனித்து வந்தார். பிரிவுக்குப் பின் அந்த மேனேஜர் நாகசைதன்யாவுக்கு ஆதரவாகச் சென்றதால் தற்போது அந்த மேனேஜரை சமந்தா மாற்றிவிட்டாராம்.
ஹிந்தியிலும் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக பாலிவுட்டைச் சேர்ந்த ஒருவரை புதிய மேனேஜராக நியமித்துள்ளாராம். அவரிடமே தெலுங்குப் படங்களுக்கான பணிகளையும் ஒப்படைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சமந்தா தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.