கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்கும் மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த சமந்தா. தமிழை விட தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தார். தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவைக் காதலித்து கரம் பிடித்து பின்னர் பிரிந்தார்.
இதுநாள் வரையிலும் சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் தெலுங்கில் ஒரே மேனேஜரே அவர்களது திரைப்படம் சம்பந்தப்பட்ட பணிகளைக் கவனித்து வந்தார். பிரிவுக்குப் பின் அந்த மேனேஜர் நாகசைதன்யாவுக்கு ஆதரவாகச் சென்றதால் தற்போது அந்த மேனேஜரை சமந்தா மாற்றிவிட்டாராம்.
ஹிந்தியிலும் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக பாலிவுட்டைச் சேர்ந்த ஒருவரை புதிய மேனேஜராக நியமித்துள்ளாராம். அவரிடமே தெலுங்குப் படங்களுக்கான பணிகளையும் ஒப்படைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சமந்தா தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.