ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் பான்-இந்தியா படமாக கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி வெளியானது. 900 கோடி வசூலைக் கடந்து தற்போது 1000 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நிஜாம் ஏரியா வெளியீட்டு உரிமையை வாங்கிய தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான தில் ராஜு நேற்று ஐதராபாத்தில் பார்ட்டி ஒன்றை வைத்தார். விஜய்யின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் இவர்தான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
நேற்று நடந்த பார்ட்டியில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தங்களது மனைவிகளுடன் கலந்து கொண்டனர். இயக்குனர் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அது மட்டுமல்ல படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'நாட்டு நாட்டு' பாடலுக்காக அவர் நடனமாடினார். பார்ட்டிக்கு வந்திருந்தவர்கள் அவரது நடனத்தைப் பார்த்து கரகோஷம் செய்தார்களாம்.
'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்குத் திரையுலகத்தில் மீண்டும் ஒரு பெரிய, பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளதால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்களாம். தெலுங்கு சினிமாவின் தரத்தை மேலும் உயர்த்தி விட்டார் ராஜமவுலி என நேற்று பார்ட்டிக்கு வந்திருந்தவர்கள் அவருக்கு தனிப்பட்ட பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்கள்.