துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்திலும் ரவுண்டு கட்டி கலக்கி வருபவர் நடிகர் ப்ருத்விராஜ் என்கிற பப்லு. இவருக்கும் நடிகர் சிலம்பரசன் குடும்பத்திற்கும் நெருங்கிய நட்பு உண்டு. ஆனால், சில வருடங்களுக்கு முன் 'ஜோடி நம்பர் ஒன் சீசன் 2' நிகழ்ச்சியின் போது போட்டியாளராக இருந்த பப்லுவுக்கும், நடுவராக இருந்த சிம்புவுக்கு இடையே முட்டிக்கொண்டது. அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சினிமா நட்சத்திரங்களின் சண்டையில் இதுவும் ஒன்று. அப்போதே சிம்புவின் ரசிகர்கள் பலர் பப்லுவை கோபத்தில் திட்டித்தீர்த்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் பப்லு அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் சிம்புவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில் அவர், 'சிம்பு நான் தூக்கி வளர்த்த பையன். நான் என்ன சொன்னாலும் கேட்பார். ஆனால் வாய் தான் கொஞ்சம் அதிகம்' என கூறியுள்ளார். இதை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் பப்லு மீது கடும் கோபத்தில் உள்ளனர். சோஷியல் மீடியாக்களில் பப்லுவுக்கு எதிராக கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.