புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு |
சர்ச்சையான கருத்துக்களை கூறி அடிக்கடி பரபரப்பில் சிக்குபவர் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா.. சமீபகாலமாக கருத்து கூறுவதை குறைத்துக் கொண்டு மீண்டும் படம் இயக்குவதில் பிசியாக இறங்கியுள்ளார். பெரும்பாலும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களையே இயக்கி வந்த ராம்கோபால் வர்மா அடுத்ததாக கன்னடத்தில் உபேந்திரா ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். படத்திற்கு ஆர் என ஒற்றை எழுத்தில் டைட்டிலும் வைத்துள்ளார்.
கேங்ஸ்டர் படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்ற இவர், இந்தப்படத்தையும் அதே ஜானரில் தான் இயக்குகிறார். உபேந்திராவின் கதாபாத்திரம் பற்றி கூறும்போது, “யாருக்கும் பயப்படாத இந்த ஆர் பெங்களூரில் பிறந்து மும்பை சென்று அன்டர்வோர்ல்ட் தாதாவாக மாறியவன்.. தாவூத் இப்ராஹீம் கூட தானாகவே ஆர் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருந்தார். அதுமட்டுமல்ல, துபாயில் உள்ள டி கம்பெனிக்கு பல உதவிகளை செய்தவன் தான் இந்த ஆர்' என குறிப்பிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.