நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் புஷ்பா. இந்த படத்தின் முதல் பாகத்தில் ஓ சொல்றியா மாமா என்ற கவர்ச்சி குத்தாட்ட பாடலில் சமந்தா நடனம் ஆடி இருந்தார். அந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் ரூ. 350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்தது.
இதன் காரணமாக புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திலும் ஐட்டம் பாடல் ஒன்று இடம் இருக்கிறது. அதில் மீண்டும் சமந்தாவை நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதன் காரணமாக தற்போது அந்த வாய்ப்பு பாலிவுட் நடிகை திஷா பதானிக்கு சென்றுள்ளது. அவர் ஓகே சொல்லிவிட்டார்.
திஷா பதானி தான் புஷ்பா படத்தில் சமந்தா நடனம் ஆடிய பாடலுக்கு முதலில் நடனமாட இருந்தவர். அவரது கால்ஷீட் பிரச்சனை காரணமாக பின்னர் இந்த பாடலில் நடனமாட சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.