புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ள பிரம்மாண்ட படம் ஆர்ஆர்ஆர். படத்தில் அல்லூரி சீதாராம ராஜுவாக ராம் சரண் நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர். கொமரம் பீம் ஆக ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். கொமரம் பீம் ஐதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே படத்தின் மையக்கரு. ராம் சரணின் காதலி சீதாவாக ஆலியா பட் நடித்துள்ளார். ஒலிவியா மோரிஸ், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட இன்னும் பிற மொழிகளில் வெளியாகி உள்ளது. உலகம் முழுக்க 10 ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் இந்த படம் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை தமிழ்நாட்டில் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் இன்று 550 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஒரு மொழிமாற்று (டப்பிங்) திரைப்படம் திரையரங்குகளில் ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு இணையாக 550 தியேட்டர்களில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். பாகுபலி படம் 320 தியேட்டர்களில்தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.