மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்க்கும் ஆர்ஆர்ஆர் படம் நாளை (மார்ச் 25) வெளிவருகிறது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ள இந்தப் படம் 500 கோடியில் தயாராகி உள்ளது. பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கி உள்ள படம்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் தயாராகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பலமுறை தள்ளிவைக்கப்பட்ட படம் இப்போது வெளியாகிறது. இந்த படம் வெளியாவதால் பல படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
படத்தின் புரமோசனுக்காக எஸ்.எஸ்.ராஜமவுலி தலைமையிலான படக் குழுவினர் இந்தியா முழுக்க சுற்றி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக எஸ்.ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் வாரணாசிக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளனர். அந்த படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.