ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

நடிகா் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். மரகதநாணயம் படத்தில் நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் உருவாகி உள்ளது. இதுகுறித்து வெளிவந்த தகவல்கள் எதையும் அவர்கள் மறுக்கவில்லை. சமீபத்தில் ஆதி தந்தையின் பிறந்த நாள் விழாவில் நிக்கி கல்ராணி கலந்து கொண்டார். பல நேரங்களில் ஆதியும், நிக்கி கல்ராணியும் இணைந்து விமானத்தில் பயணம் செய்தார்கள். ஐதராபாத்தில் பல இடங்களில் ஒன்றாக சுற்றி உள்ளனர். தங்களது காதலை இருவருமே இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ஆதி கூறியிருப்பதாவது : கிளாப் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து, லிங்குசாமி இயக்கும் 'தி வாரியர்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன். சவாலான கதைகளை நிதானமாகத் தேர்ந்தெடுக்கிறேன். அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'பார்ட்னர்' ஒரு நகைச்சுவை படம். எனது திருமணம் பற்றி விரைவில் அறிவிப்பு வரும். காதல் திருமணம்தான் ஆனாலும் இரண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் நடக்கும். விரைவில் முறைப்படி அறிவிப்பேன். என்றார்.