தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிகா் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். மரகதநாணயம் படத்தில் நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் உருவாகி உள்ளது. இதுகுறித்து வெளிவந்த தகவல்கள் எதையும் அவர்கள் மறுக்கவில்லை. சமீபத்தில் ஆதி தந்தையின் பிறந்த நாள் விழாவில் நிக்கி கல்ராணி கலந்து கொண்டார். பல நேரங்களில் ஆதியும், நிக்கி கல்ராணியும் இணைந்து விமானத்தில் பயணம் செய்தார்கள். ஐதராபாத்தில் பல இடங்களில் ஒன்றாக சுற்றி உள்ளனர். தங்களது காதலை இருவருமே இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ஆதி கூறியிருப்பதாவது : கிளாப் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து, லிங்குசாமி இயக்கும் 'தி வாரியர்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன். சவாலான கதைகளை நிதானமாகத் தேர்ந்தெடுக்கிறேன். அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'பார்ட்னர்' ஒரு நகைச்சுவை படம். எனது திருமணம் பற்றி விரைவில் அறிவிப்பு வரும். காதல் திருமணம்தான் ஆனாலும் இரண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் நடக்கும். விரைவில் முறைப்படி அறிவிப்பேன். என்றார்.