300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கே.எஸ்.ரவிக்குமார். பின்னர் அவரும் இயக்குனராகி ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி ஹீரோக்களையும் வைத்து படங்களை இயக்கி விட்டார். சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கே.எஸ். ரவிக்குமார் தற்போது கூகுள் கூட்டப்பா என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இப்பட விழாவில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், கூகுள் கூட்டப்பா படத்தை அடுத்து புதுமுக இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார். அதோடு அந்த படத்தில் தனது குருநாதர் விக்ரமனின் மகன் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதையும் தெரிவித்த கே.எஸ். ரவிக்குமார், அந்த படம் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாகவும் கூறினார்.