பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜூமுருகன். இதில் ஜோக்கர் படம் சமூக அவலத்தையும், அரசியல்வாதிகளின் பிடியில் சாமானியன் சிக்கித் தவிப்பதையும் நையாண்டியாக சித்தரித்து இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இதை தொடர்ந்து ஜீவாவை வைத்து ராஜுமுருகன் இயக்கிய ஜிப்ஸி திரைப்படம் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக கார்த்தி நடிக்கும் படத்தை அவர் இயக்கப் போகிறார் என சொல்லப்பட்டு வந்தது.
இந்த படத்தின் கதை உருவாக்கத்திற்காக தென்காசியில் முகாமிட்டு தற்போது படத்தின் ஸ்கிரிப்ட் முழுவதையும் தயார் செய்து விட்டாராம் ராஜு முருகன். விருமன் படத்தை முடித்துவிட்ட கார்த்தி, தற்போது பிஎஸ் மித்ரன் டைரக்ஷனில் சர்தார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் வரும் மே மாதம் ராஜூ முருகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.