ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜூமுருகன். இதில் ஜோக்கர் படம் சமூக அவலத்தையும், அரசியல்வாதிகளின் பிடியில் சாமானியன் சிக்கித் தவிப்பதையும் நையாண்டியாக சித்தரித்து இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இதை தொடர்ந்து ஜீவாவை வைத்து ராஜுமுருகன் இயக்கிய ஜிப்ஸி திரைப்படம் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக கார்த்தி நடிக்கும் படத்தை அவர் இயக்கப் போகிறார் என சொல்லப்பட்டு வந்தது.
இந்த படத்தின் கதை உருவாக்கத்திற்காக தென்காசியில் முகாமிட்டு தற்போது படத்தின் ஸ்கிரிப்ட் முழுவதையும் தயார் செய்து விட்டாராம் ராஜு முருகன். விருமன் படத்தை முடித்துவிட்ட கார்த்தி, தற்போது பிஎஸ் மித்ரன் டைரக்ஷனில் சர்தார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் வரும் மே மாதம் ராஜூ முருகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.