பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழில் 'ஏழாம் அறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகானார். விஜய், அஜித், சூர்யா என டாப் நடிகர்களுடன் நடித்திருந்தாலும் தமிழில் அவர் டாப் நடிகையாக இடம் பெற முடியவில்லை. தமிழில் நடிப்பதைவிடவும் ஹிந்தியில் நடிப்பதில் அவர் அதிக ஆர்வம் காட்டியதே அதற்குக் காரணம்.
இருந்தாலும் தற்போது பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் பான்--இந்தியா படமான 'சலார்' படத்தில் அவரது ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னணி இயக்குனரான கோபிசந்த் மலினேனி இப்படத்தை இயக்குகிறார்.
இதற்கடுத்து சிரஞ்சீவி ஜோடியாக மற்றுமொரு தெலுங்குப் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். பாபி இயக்கத்தில் சிரஞ்சீவியின் 154வது படமாக இந்தப் படம் உருவாக உள்ளது. நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இது பற்றி தகவலை சிரஞ்சீவியும் வெளியிட்டிருந்தார்.
அடுத்தடுத்து மூன்று பெரிய தெலுங்குப் படங்களில் நடிக்க ஸ்ருதி ஒப்பந்தமாகி இருந்தாலும் 'சலார்' படம் தவிர மற்ற இரண்டு படங்களிலும் 60 வயதிற்கு அதிகமான நடிகர்களான பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோருடன் நடிக்க சம்மதித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.