எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'பாகுபலி, சாஹோ' படங்களை அடுத்து பான்--இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள 'ராதேஷ்யாம்' படம் நாளை மறுதினம் மார்ச் 11ம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள இப்படத்தின் உலக அளவிலான வியாபாரம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் வெளியிட்டு உரிமை 105 கோடி, வெளிநாடு உரிமை 24 கோடி, வட இந்தியா உரிமை 40 கோடி, கர்நாடகா உரிமை 17 கோடி, தமிழ்நாடு உரிமை 10 கோடி, கேரளா உரிமை 4 கோடி என மொத்தமாக 200 கோடி வரையில் வியாபாரம் நடந்துள்ளதாம்.
இப்படத்தின் 5 மொழி ஓடிடி உரிமையையும் முன்னணி ஓடிடி தளம் ஒன்று 250 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 350 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் தியேட்டர், ஓடிடி உரிமைகளின் மூலம் மட்டுமே 550 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது என்கிறார்கள்.
பிரபாஸின் முந்தைய படங்களான 'சாஹோ, பாகுபலி 2, பாகுலி 1' ஆகிய படங்கள் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அது போல இந்தப் படமும் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பாகுபலி 2' வசூலை மிஞ்சினால்தான் பிரபாஸின் அடுத்தடுத்த பான்--இந்தியா படங்களுக்கும் வியாபாரம் இன்னும் அதிகம் நடக்கும் என்கிறது டோலிவுட் வட்டாரம்.