ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
'பாகுபலி, சாஹோ' படங்களை அடுத்து பான்--இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள 'ராதேஷ்யாம்' படம் நாளை மறுதினம் மார்ச் 11ம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள இப்படத்தின் உலக அளவிலான வியாபாரம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் வெளியிட்டு உரிமை 105 கோடி, வெளிநாடு உரிமை 24 கோடி, வட இந்தியா உரிமை 40 கோடி, கர்நாடகா உரிமை 17 கோடி, தமிழ்நாடு உரிமை 10 கோடி, கேரளா உரிமை 4 கோடி என மொத்தமாக 200 கோடி வரையில் வியாபாரம் நடந்துள்ளதாம்.
இப்படத்தின் 5 மொழி ஓடிடி உரிமையையும் முன்னணி ஓடிடி தளம் ஒன்று 250 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 350 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் தியேட்டர், ஓடிடி உரிமைகளின் மூலம் மட்டுமே 550 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது என்கிறார்கள்.
பிரபாஸின் முந்தைய படங்களான 'சாஹோ, பாகுபலி 2, பாகுலி 1' ஆகிய படங்கள் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அது போல இந்தப் படமும் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பாகுபலி 2' வசூலை மிஞ்சினால்தான் பிரபாஸின் அடுத்தடுத்த பான்--இந்தியா படங்களுக்கும் வியாபாரம் இன்னும் அதிகம் நடக்கும் என்கிறது டோலிவுட் வட்டாரம்.