இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

'பாகுபலி, சாஹோ' படங்களை அடுத்து பான்--இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள 'ராதேஷ்யாம்' படம் நாளை மறுதினம் மார்ச் 11ம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள இப்படத்தின் உலக அளவிலான வியாபாரம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் வெளியிட்டு உரிமை 105 கோடி, வெளிநாடு உரிமை 24 கோடி, வட இந்தியா உரிமை 40 கோடி, கர்நாடகா உரிமை 17 கோடி, தமிழ்நாடு உரிமை 10 கோடி, கேரளா உரிமை 4 கோடி என மொத்தமாக 200 கோடி வரையில் வியாபாரம் நடந்துள்ளதாம்.
இப்படத்தின் 5 மொழி ஓடிடி உரிமையையும் முன்னணி ஓடிடி தளம் ஒன்று 250 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 350 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் தியேட்டர், ஓடிடி உரிமைகளின் மூலம் மட்டுமே 550 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது என்கிறார்கள்.
பிரபாஸின் முந்தைய படங்களான 'சாஹோ, பாகுபலி 2, பாகுலி 1' ஆகிய படங்கள் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அது போல இந்தப் படமும் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பாகுபலி 2' வசூலை மிஞ்சினால்தான் பிரபாஸின் அடுத்தடுத்த பான்--இந்தியா படங்களுக்கும் வியாபாரம் இன்னும் அதிகம் நடக்கும் என்கிறது டோலிவுட் வட்டாரம்.