கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
இசை ரசிகர்களை தங்களது மயக்கும் இசையால் கட்டிப் போட்டவர்கள் இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான். இவர்கள் இருவரும் துபாயில் உள்ளனர். அங்கு இருவருமே இசை நிகழ்ச்சி நடத்தினர். இந்நிலையில் துபாயில் உள்ள ரஹ்மானின் இசை ஸ்டுடியோவுக்கு இளையராஜா சென்றார். இதுப்பற்றி ரஹ்மான் குறிப்பிடும்போது, ‛‛'பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு மேஸ்ட்ரோவை(இளையராஜா) வரவேற்பதில் மகிழ்ச்சி; எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் இசை அமைப்பார் என நம்புகிறேன்' என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள இளையராஜா, ‛‛ரஹ்மான் கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பு தொடங்கும்'' என்றார்.
ஒருகாலத்தில் இளையராஜாவின் இசை குழுவில் பணியாற்றினார் ரஹ்மான். இன்று ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வென்று தற்போது உலகமே திரும்பி பார்க்கும் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.