புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என எண்ணற்ற படங்களில் நடன இயக்குனராகப் பணியாற்றியவர் ராஜு சுந்தரம். அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'ஏகன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2008ல் வெளிவந்த அந்தப் படம் வெற்றிப் படமாக அமையாமல் தோல்விப்படமாக அமைந்தது.
அதன்பின் இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் நடன இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். கடந்த சில வருடங்களாகவே அவர் மீண்டும் இயக்கம் பக்கமும் திரும்பப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது தெலுங்கு நடிகரான சர்வானந்திடம் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறாராம். அக்கதையைக் கட்ட சர்வானந்த், முழு திரைக்கதையையும் தரச் சொல்லி கேட்டிருக்கிறாராம்.
14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்க நினைக்கும் ராஜு சுந்தரத்தின் ஆசையும், முயற்சியும் நிறைவேறுமா என்பது சீக்கிரமே தெரிய வரும்.