பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தில் காமெடியனாக நடிக்கிறார். இது தவிர மேலும் சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டுள்ளார்.
இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு ஒரு பாடல் பாடியிருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். அதோடு இதற்கு முன்பு எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டு கேட்கும், வாடி பொட்ட புள்ள வெளியே உள்ளிட்ட சில சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கும் வடிவேலு இதுபோன்று டிராப் சாங் பாடியதில்லை. முதன்முறையாக ஒரு புதிய முயற்சியை இந்தப் படத்தில் அவர் எடுத்துள்ளார். இந்த பாடல் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும் என்றும் சந்தோஷ் நாராயணன் தெரிவிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.