ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இயக்குனர் பாண்டிராஜ், சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ் ஆகியோரும், தெலுங்குத் திரையுலகிலிருந்து சிறப்பு விருந்தினகர்களாக நடிகர் ராணா டகுபட்டி, இயக்குனர்கள் பொயப்பட்டி சீனு, கோபிசந்த் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் சூர்யா பேசுகையில், “தெலுங்கு ரசிகர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த கொரோனா சமயத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை அகான்டா முதல் புஷ்பா வரை, பங்கார்ராஜு முதல் பீம்லாநாயக் வரைக் காட்டிவிட்டீர்கள். உங்களால்தான் எங்களுக்கும் நம்பிக்கை வந்தது, அதனால்தான் படத்தை நம்பிக்கையுடன் வெளியிடுகிறோம்.
என்ஜிஓ ஆரம்பிப்பதற்கு சிரஞ்சீவிதான் எனக்கு முன்னுதாரணமாக இருந்தார். நீங்கள் வலிமையும், சக்தியையும் கொடுப்பதால்தான் இப்படியெல்லாம் செய்ய முடிகிறது. இதற்கு முன்பு நான் நடித்த படங்கள் எல்லாம் சிறப்பானவை. இப்படத்தில் பிரியங்காவின் உழைப்பு மிகவும் அற்புதமானது. பல வருடங்களுக்கு முன்பு எனது கம்பெனியில்தான் பாண்டிராஜ் அவருடைய பயணத்தை ஆரம்பித்தார். நீண்ட நாட்களாக நல்லுறவுடன் இருக்கிறோம். எதற்கும் துணிந்தவன் படத்தை தியேட்டர்களில் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும்,” என்றார்.