புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மணிகண்டன் இயக்கத்தில் பிப்ரவரி 11ந்தேதி வெளியான படம் கடைசி விவசாயி. விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை பார்த்து வியந்து போன இயக்குனர் மிஷ்கின், மணிகண்டனை உசிலம்பட்டியில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று சந்தித்து மாலை அணிவித்து கட்டித்தழுவி பாராட்டி இருக்கிறார். அதையடுத்து இப்படத்தில் நாயகனாக நடித்து இருந்த நல்லாண்டியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி உள்ளார்.
இது குறித்த புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு மிஷ்கின் கூறுகையில், ‛‛கடைசி விவசாயி தந்த மகா கலைஞனாக மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்கு சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பை தமிழுக்கு தந்த அவனுக்கு நன்றி கூறி அவன் கரங்களை முத்தமிட்டேன். அப்படத்தின் கதையின் நாயகனான ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்கு சென்று மதிய உணவு உண்டோம். இந்த ஒரு நாள் ஒரு அற்புத நாளாக மாறியது. மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்'' என தெரிவித்துள்ளார்.